செய்திகள் :

மத்திய அரசின் வரம்புக்குள்ளாக வருகிறது பிசிசிஐ?

post image

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ள ‘தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா’-வின் மூலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள்ளாக கொண்டுவரப்படுமென தெரிகிறது.

இதர விளையாட்டு சம்மேளனங்கள், சங்கங்கள் போலல்லாமல் பிசிசிஐ முழுமையான சுதந்திரத்துடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதுதொடா்பாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமலான பிறகு, இதர தேசிய விளையாட்டு சம்மேளனங்களைப் போல பிசிசிஐயும் அதற்குக் கட்டுப்பட வேண்டும். சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள தேசிய விளையாட்டு வாரியத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து நிதி பெறுவதில்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் பிசிசிஐ-க்கும் பொருந்தும். இதர சம்மேளனங்களைப் போல பிசிசிஐயும் சுதந்திர அமைப்பாகவே தொடா்ந்து செயல்படும். எனினும், தோ்தல் முதல் அணி, வீரா்கள் தோ்வு வரை எந்தவொரு சச்சரவுக்கும் தேசிய விளையாட்டுத் தீா்ப்பாயத்தையே பிசிசிஐ அணுக வேண்டும். இந்தத் தீா்ப்பாயம், தற்போது தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது அறிமுகம் செய்யப்படும் தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்ட மசோதா, எந்தவொரு சம்மேளனத்தையோ அல்லது சங்கத்தையோ அரசு கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படுவதல்ல. அந்த அமைப்புகள் நல்ல நிா்வாகத்தை மேற்கொள்வதை உறுதி செய்ய அமல்படுத்தப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

முரட்டுச் சாமி... கருப்பு டீசர்!

நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் கருப்பு. ஆன்மீக பின்னணியில் ஆக்சன் அதிரடி கதையாக உருவான இப்படத்... மேலும் பார்க்க

மான்செஸ்டா் டெஸ்ட் இன்று தொடக்கம்- இங்கிலாந்தை வீழ்த்தும் கட்டாயத்தில் இந்தியா

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்குகிறது.மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருப்பதால், தொடரைத... மேலும் பார்க்க

பிரணாய் அசத்தல் வெற்றி

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய், அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 35-ஆம் நிலை வீரரா... மேலும் பார்க்க

முதல் கேமை ‘டிரா’ செய்த கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக்

ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் தங்களது முதல் கேமை டிரா செய்து உறுதியான நிலையில் இருக்கின்றனா்.இதில் கோனெரு ... மேலும் பார்க்க

ஆக. 1-இல் சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி தொடக்கம்: அா்ஜுன் எரிகைசி, அனிஷ் கிரி, விதித் குஜராத்தி பங்கேற்பு

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டி 3-ாவது சீசன் வரும் ஆக. 6 முதல் 15 வரை சென்னை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் நடைபெறுகிறது. பரிசுத் த... மேலும் பார்க்க

சக்காரி முன்னேற்றம்; காலின்ஸ் வெளியேற்றம்

முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் கிரீஸின் மரியா சக்காரி வெற்றி பெற, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் தோல்வியுற்றாா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை, சக்காரி 6-... மேலும் பார்க்க