செய்திகள் :

பாங்காக்: நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்... 43 பேரின் கதி என்ன?

post image

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அதில் சிக்கியிருந்த 43 பேரை மீட்புப் பணியினர் தேடி வருகின்றனர்.

மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மரின் சாகெய்ங் நகரின் வடமேற்கில் 16 கி.மீ தொலைவில் மதியம் 12.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

பூமியின் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம் உணரப்பட்டு 12 நிமிடங்களில் சாகெய்ங் நகரின் தெற்கே 18 கி.மீ தொலைவில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

மியான்மரின் டௌங்கோ நகரில் தொழுகை நடைபெற்றபோது மசூதி இடிந்து விழுந்ததால் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

பாங்காக் நகரில் ஏற்பட்ட பாதிப்புகள்

மியான்மரைப் போலவே தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாங்காக்கில் சில பகுதிகளில் ரயில், மெட்ரோ சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாங்காக் நகரில் பல பகுதிகள் மோசமாக பாதிப்படைந்து வடக்குப் பகுதியில் கட்டப்பட்டு வந்த அரசின் 30 மாடி அலுவலகக் கட்டடம் சில நொடிகளில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

அந்தக் கட்டடத்தில் 43 பேர் சிக்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களின் நிலைமை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

ஒருவர் பலியானதாகவும் 7 பேர் வரை தப்பித்ததாகவும் கூறப்படும் நிலையில் மீட்புப் பணியினர் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

30 மாடி கட்டடம் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்: பிரதமர் மோடி கவலை!

இந்த நிலநடுக்கம் சீனா, வங்கதேசம், இந்தியா உள்பட பல பகுதிகளில் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிப... மேலும் பார்க்க

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் ... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க