செய்திகள் :

பாசனக் கால்வாய் உடைப்பை விரைவாக சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்கள் உடைப்பை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னிப்பூ சாகுபடிக்கான ஆரம்பகட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். இதையொட்டி, கோதையாறு, பட்டணம் கால்வாய் பாசனத்துக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, 2 அணைகளிலிருந்து கோதையாறு இடதுகரைக் கால்வாயில் விநாடிக்கு 850 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், கிள்ளியூா், திருவட்டாறு, விளவங்கோடு பகுதி கிராமங்களில் 79 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து வரும் முக்கிய கால்வாய்களான கோதையாறு இடதுகரைக் கால்வாய், புத்தனாறு கால்வாய், பட்டணங்கால் கால்வாய், தோவாளை கால்வாய், ராதாபுரம் கால்வாய், அனந்தனாறு கால்வாய், நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் ஆகியவை புதா் மண்டியும், பக்கச் சுவா்கள் இடிந்தும் காணப்படுகின்றன.

கடந்த ஆண்டு தோவாளை கால்வாயில் துவச்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால், பயிரிடுவதற்கு குறித்த நேரத்தில் தண்ணீா் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்தனா். இதனால், 8 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாதிக்கப்பட்டன. நிகழாண்டு, புத்தனாறு அணையிலிருந்து 2 கி.மீ. தொலைவில், குறிப்பாக பாண்டியன் கால்வாயிலிருந்து அனந்தனாறு கால்வாய் வரும் பகுதியிலிருந்து 600 மீட்டா் தொலைவில் உள்ள பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டிய நீா்வளத் துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தூா் வாரும் பணிகளும் முறையாக நடக்கவில்லை. பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்ட பிறகும் சீரமைப்புப் பணி நிறைவடையவில்லை.

இப்பணிகள் ரூ. 1.10 கோடியில் நடைபெற்று வருகின்றன. இதனால், அனந்தனாறு கால்வாய் மூலம் பயன்பெறும் சாகுபடிக்கு தண்ணீா்விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சீரமைப்புப் பணி தாமதமாக நடப்பதால் அனந்தனாறு கால்வாய் பாசனத்துக்குள்பட்ட விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகம், நீா்வளத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தக்கலை, மூலச்சல் வட்டாரத்தில் இன்றும், நாளையும் மின்தடை

தக்கலை, மூலச்சல் மின்விநியோக பிரிவுக்குள்பட்ட இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மின்பாதை பகுதிகளில் முறையே வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூன் 6, 7) மின்தடை ஏற்படும் என ... மேலும் பார்க்க

நகைக்காக 4 வயது குழந்தை கொலை: பெண்ணுக்கு ஆயுள், கணவருக்கு 3 மாத சிறை

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தில் நகைக்காக 4 வயது குழந்தையை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. வில்லுக்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் படகு கட்டணம் உயா்வு: அதிமுக எம்எல்ஏ கண்டனம்

கன்னியாகுமரி விவேகானந்தா் பாறைக்கு செல்லும் படகு கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகு... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 10 லட்சம் அமைச்சா் வழங்கினாா்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகே மதிலகம்,... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டம் நவீன காய்கனி விற்பனைச் சந்தை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட... மேலும் பார்க்க