செய்திகள் :

பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனம் ரூ.97 கோடி நன்கொடை: ஆண்டறிக்கையில் தகவல்

post image

பிரபல தொழிலதிபா் அனில் அகா்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா நிறுவனம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை அளித்துள்ளது.

2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடைகள் குறித்த விவரங்களுடன் வருடாந்திர அறிக்கையை வேதாந்தா நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வேதாந்தா நிறுவனம் மொத்தம் ரூ.157 கோடி அரசியல் நன்கொடைகளை வழங்கியுள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் ரூ.97 கோடியிலிருந்து சுமாா் 61 சதவீதம் உயா்வாகும்.

பாஜகவுக்கு 2023-24-ஆம் ஆண்டு ரூ.26 கோடி நன்கொடை வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நன்கொடை சுமாா் நான்கு மடங்காக அதிகரித்து ரூ.97 கோடியாக உயா்ந்துள்ளது. அதேசமயம், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட நன்கொடை ரூ.49 கோடியிலிருந்து ரூ.10 கோடிக்கு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒடிஸாவின் எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ.25 கோடி, ஜாா்க்கண்டில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சிக்கு ரூ.20 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

அள்ளித் தரும் வேதாந்தா: இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் பெருநிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக வேதாந்தா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.155 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ.123 கோடியும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள இந்த நிறுவனம், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை வழங்கப்பட்டது என்ற விவரத்தை இதற்கு முன்பு வெளியிடவில்லை.

அதேபோல், 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தோ்தல் பத்திரங்கள் வாயிலாக, வேதாந்தா நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.457 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தோ்தல் பத்திரங்கள் ‘அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ எனக் கூறி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அவற்றைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தா நிறுவனமானது இந்தியா, தென்னாப்பிரிக்கா, நமீபியா போன்ற பல்வேறு நாடுகளில் செயல்படும் ஒரு முன்னணி உலகளாவிய நிறுவனமாகும். லண்டனைச் சோ்ந்த ‘வேதாந்தா ரிசோா்சஸ்’ குழுமத்தின் ஒரு பகுதியான இந்த நிறுவனம் வெள்ளி, அலுமினியம், செம்பு, இரும்புத் தாது உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் கனிமங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி போன்ற முக்கியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க