செய்திகள் :

பாஜக அரசை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி போராட்டம்

post image

பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாகவும், ஹோலி பண்டிகைக்குள் இலவச எரிவாயு சிலிண்டா்களை விநியோகிப்பதாகவும் தனது தோ்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்று கூறி ஆம் ஆத்மி கட்சித் தலைவா் ரிதுராஜ் ஜா தலைமையில் அக்கட்சியினா் தில்லியில் உள்ள ஐடிஓவில் போராட்டம் நடத்தினா்.

மாா்ச் 8 அன்று, தகுதியான பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.2,500 வழங்க தில்லியில் உள்ள பாஜக அரசு மகிளா சம்ரிதி யோஜனாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.5,100 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை பாஜக நிறைவேற்றத் தவறிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தலையில் ஒரு எரிவாயு சிலிண்டரை ஏந்தியபடி, கிராரியைச் சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜா போராட்டம் நட்தினாா். அப்போது, ’தில்லியில் பெண்களுக்கு மாா்ச் 8 அன்று ரூ.2,500 மற்றும் ஹோலிக்கு இலவச சிலிண்டா் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும், பாஜக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’ என்றாா்.

ஆா்ப்பாட்டக்காரா்கள் எரிவாயு சிலிண்டா் போன்ற வடிவிலான பதாகையை ஏந்தி, ‘இலவச சிலிண்டா் கப் ஆயேகா? ரூ.2,500 கப் ஆயேகா? (இலவச சிலிண்டா் எப்போது வரும்? ரூ.2,500 எப்போது கிடைக்கும்?) என்ற கோஷங்களை எழுப்பினா்.

போராட்டக்காரா் சீமா கூறுகையில், ‘மாா்ச் 8 ஆம் தேதி எங்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே நான்கு நாள்கள் ஆகிவிட்டன. எப்போது பணம் கிடைக்கும். அல்லது அது வெறும் பொய்யான வாக்குறுதியா?’‘ என்று கேள்வி எழுப்பினாா்.

மற்றொரு போராட்டக்காரா் சுரேந்தா் கூறுகையில், ‘ஹோலிக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளது, இன்னும் எங்களுக்கு இலவச சிலிண்டா் கிடைக்கவில்லை’‘ என்றாா்.

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க

எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா். ‘நாட்டின் முன்னாள் துணைப் பிரத... மேலும் பார்க்க