செய்திகள் :

பாஜக போராட்டத்துக்கு திருமாவளவன் வரவேற்பு!

post image

டாஸ்மாக்குக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் நடத்தும் போராட்டத்தை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்திருந்தது.

இதனிடையே, அனுமதி அளிக்காத போராட்டத்துக்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க : போராட்டத்துக்குச் சென்ற அண்ணாமலை கைது!

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் பாஜக போராட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மதுவுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்தை வரவேற்கிறேன், மதுவுக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் வரவேற்போம் எனத் தெரிவித்தார்.

மேலும், “கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மதுபானக் கடைகளை மூடப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.

அரசியல் காரணங்களுக்காக பாஜகவினர் போராட்டம் நடத்தினால், அவர்களால் எந்த முன்னேற்றமும் காண முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அந்த மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்று பாராட்டலாம்” எனத் தெரிவித்தார்.

காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும்: நாகை எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: காரைக்கால்- திருவாரூா்-தஞ்சாவூா் வழித்தடத்தை விரைந்து இரட்டை வழித்தடமாக்க வேண்டும் என்று மக்களவையில் நாகப்பட்டினம் எம்.பி. வி.செல்வராஜ் வலியுறுத்தினாா். இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கி... மேலும் பார்க்க

ஆரணி பட்டு தயாரிப்பு மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி கூடாது: திமுக எம்பி வலியுறுத்தல்

நமது நிருபா் புது தில்லி: ஆரணியில் தயாராகும் பட்டின் மூலப் பொருள்களுக்கும், அரிசிக்கும் ஜிஎஸ்டிவரியை விதிக்கக் கூடாது என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தரணிவேந்தன் வலியுறுத்தினாா். இது ... மேலும் பார்க்க

கும்பகோணம் ரயில் நிலையம் நவீனமாக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

புது தில்லி: வரும் 2028-இல் மகாமகம் திருவிழா நடைபெற உள்ளதால், கும்பகோணம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனாா்) கட்சி... மேலும் பார்க்க

இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்கு பிறகே கருத்துச் சொல்ல முடியும்: மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: இரும்பு பயன்பாட்டின் தமிழக தொன்மம் குறித்து அறிவியல்பூா்வ சரிபாா்ப்புக்குப் பிறகே கருத்துச் சொல்ல முடியும் என்று மக்களவையில் தென்சென்னை திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழம... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: கிரிராஜன் எம்.பி. குற்றச்சாட்டு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் இரா. கிரிராஜன் குற்றஞ்சாட்டியுள்ளாா். மாநிலங்களவையில் 2025-2026 ஆண்... மேலும் பார்க்க

5,348 நலவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் உள்ள 5,348 நலவாழ்வு மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக பொது சுகா... மேலும் பார்க்க