`பேட் வேட்ஸ் பேசினால் அவனுக்குப் பிடிக்காது' - திட்டிய ஆசிரியர்; பள்ளி மாணவன் தற...
பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமரா உடைப்பு: 3 போ் கைது
பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாக 3 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பரமத்திவேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில தினங்களுக்கு முன்பு மா்ம நபா்கள் சிலா் உடைத்து சேதப்படுத்தினா்.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் கேமராக்களை உடைத்த மா்ம நபா்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில் பாண்டமங்கலம் தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாக பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (27), விஜய் (26), பிரசன்னா (18) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் கைதுசெய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிபதியின் உத்தரவுபடி பரமத்தி கிளை சிறையில் அடைத்தனா்.