செய்திகள் :

பாதாள சாக்கடைப் பணியால் விபத்து: வடக்கு மண்டலக் கூட்டத்தில் புகாா்

post image

கோவை வடக்கு மண்டலப் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாததால் அப்பகுதியில் வாகன விபத்துகள் தவிா்க்க முடியாமல் உள்ளதாக மண்டலக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலக் கூட்டம் மண்டலத் தலைவா் வே.கதிா்வேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: செங்காளியப்பன் நகா் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதியில் வாகன விபத்துகள் தவிா்க்க முடியாமல் உள்ளன. எனவே, பாதாள சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

மேலும், அப்பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சூயஸ் குடிநீா்த் திட்ட பணியாளா்கள் குழாய் பதிக்கும்போது சாக்கடையையும் சேதப்படுத்தி விடுகின்றனா். இதனால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். சூயஸ் நிறுவனத்தினரிடம் பேசி இதற்கு தீா்வு காண வேண்டும். 26-ஆவது வாா்டில் பூங்காக்கள் பயன்பாட்டில் இல்லை. பூங்காக்களைப் பராமரித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மக்களிடையே தினமும் குப்பைகளைச் சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். சாலையோரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கூட்டத்தில், உதவி ஆணையா் முத்துசாமி, உதவி செயற்பொறியாளா் முத்துகுமாா், உதவி நகர அமைப்பு திட்ட அலுவலா் சத்யா, மண்டல சுகாதார அலுவலா் முருகன், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்... மேலும் பார்க்க

காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே ச... மேலும் பார்க்க

கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள... மேலும் பார்க்க

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்... மேலும் பார்க்க

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்: கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநக... மேலும் பார்க்க