செய்திகள் :

பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் பாகிஸ்தான்: பின்னணியில் என்ன நடக்கிறது?

post image

பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாகிஸ்தான் அரசு இந்திய மதிப்பில் ரூ.77,343 கோடி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் பின்னணியில் இருப்பது யார்? என்ன நடக்கிறது? என்பதை உலக அரசியல் நகர்வுகளைப் பார்த்தால் தெளிவாகவே புலப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி...

பல கோடிகள் கடனில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.எஃப்.) நிதியுதவி முதுகெலும்பாக விளங்குகிறது. கடந்த 2023முதல், ஐ.எம்.எஃப்.-இன் நிதியை நம்பியே பாகிஸ்தானின் பெரும் பகுதி செலவினம் நடைபெறுகிறது. கடந்தாண்டு செப்டம்பரில், ஐ.எம்.எஃப். 7 பில்லியன் டாலர் தொகையை பாகிஸ்தானுக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்தது. சுருக்கமாகச் சொல்வதானால், பாகிஸ்தானின் பொருளாதாரம் ஐ.எம்.எஃப். கையில்...

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி மூலம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது மறைமுகமாக நடைபெறுகிறது.

மேற்கண்ட நிதியால் அந்நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதால், பாகிஸ்தான் அரசால் தமது உள்நாட்டு வருவாயை ராணுவத்துக்கு ஒதுக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழிவகை செய்கிறது.

கடந்த 1958-ஆம் ஆண்டுமுதல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் 20-க்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் உற்ற துணையான சீனா...

பாகிஸ்தானின் ராணுவத்துக்கு தேவையான பங்களிப்பை வழங்குவதில் சீனா இறுக்கமாகக் கைகோர்த்து நிற்கிறது.

தமக்கு பக்கபலமாக இருக்கும் சீனா உள்ளிட்ட தோழமை நாடுகளிடமிருந்து 2024-25 நிதியாண்டில் சுமார் 12 பில்லியன் டாலர் கடன் வாங்க பாகிஸ்தான் முனைப்பு காட்டியுள்ளது. தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு சீனாவை அதிகம் சார்ந்திருக்கிறது பாகிஸ்தான்.

கடந்த காலங்களில் சீனாவிடமிருந்து பல கோடிகள் கடன் பெற்றுள்ள பாகிஸ்தானின் மொத்த கடனில் மூன்றில் ஒருபங்கு சீனாவிடமே பெறப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகள்...

மேற்காசியாவிலுள்ள வளைகுடா நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு தொடர்ச்சியாக பெரும் நிதியுதவி கிடைக்கிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலையில் பாகிஸ்தானின் மத்திய வங்கிக் கணக்கில், 2 பில்லியன் டாலர் தொகையை சவூதி அரேபியா செலுத்தி நிதியுதவியளித்தது. கடந்தாண்டு டிசம்பரில், மேலும் 3 பில்லியன் டாலர் வழங்கியது சவூதி அரேபியா.

அதேபோல, ஐக்கிய அரபு அமீரகம் 1 பில்லியன் டாலர் செலுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரியிலும் இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகம் 2 பில்லியன் டாலர் பாகிஸ்தானுக்கு வழங்கியிருக்கிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல, மேற்கண்ட நிதியுதவி மூலம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது மறைமுகமாக நடைபெறுகிறது.

இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பாகிஸ்தான் அரசு இந்திய மதிப்பில் ரூ.77,343 கோடி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

இன்னொருபுறம், பயங்கரவாத குழுக்களுக்கும் ஆதரவளித்து தமது எதிரி நாடுகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை ராணுவ உதவியுடன் அஸ்திரமாக பயன்படுத்தி வருவதும் வெளிப்படையாக அந்நாட்டின் அமைச்சர்களாலும் கடந்த காலங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

உணவுக்காக காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கட... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் ஏற்பு! இஸ்ரேலின் வான்வழி மீண்டும் திறப்பு!

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால், மூடப்பட்ட இஸ்ரேலின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள்களாக நடைபெற்று வந்த போரானது நிறுத்தப்படுவதாக,... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிரதமர்

ஈரானுடனான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாகவும் ஈரானுக்கு எதிராக அனைத்து போர் இலக்குகளையும் அடைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரா... மேலும் பார்க்க

கண்ணாமூச்சி ஆடும் ஈரான்-இஸ்ரேல்! இறங்கி அடித்துவிட்டு போர் நிறுத்தமா?

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் முடிவாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.இஸ்ரேல் -... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! - டிரம்ப்புக்கு நெதன்யாகு நன்றி

ஈரானுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.இருநாடுகளும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

ஆபரேஷன் சிந்து மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரான் நாட்டில் சிக்கியிருந்த 292 இந்தியர்கள் இன்று (ஜூன் 24) காலை தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இருநாடுக... மேலும் பார்க்க