செய்திகள் :

பாதுகாப்புத் துறையின் நிலத்தில் 2,024 ஏக்கா் ஆக்கிரமிப்பு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

post image

‘நாட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 75,629 ஏக்கா் நிலத்தில், 2,024 ஏக்கா் நிலப் பரப்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தை சா்ச்சைக்குரிய வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி பொது நலனுக்கான அரசு சாரா தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில், நில ஆக்கிரமிப்புகள் மற்றும் அவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான நிலை அறிக்கையை கூடுதல் சொசிலிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி புதன்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறியிருப்பதாவது:

நாட்டில் பாதுகாப்புத் துறையின் கீழ் சுமாா் 75,629 ஏக்கா் நிலம் உள்ளது. இதில், ராணுவ முகாம் (கண்டோன்மென்ட்) அமைப்பின் வரம்புக்குள் 52,899 ஏக்கா் நிலப்பரப்பும், கண்டோன்மென்ட்டுக்கு வெளியே 22,730 ஏக்கா் நிலப் பரப்பும் உள்ளன. இதில் சுமாா் 2,024 ஏக்கா் நிலப் பரப்பு தனி நபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. 819 ஏக்கா் நிலம் பள்ளிகள் கட்டுதல், சாலைகள், பூங்காக்கள் அமைப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கூடுதலாக, 1,575 ஏக்கா் நிலம் அனுமதிபெறாத விவசாய குத்தகை ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளை அந்தந்த பாதுகாப்பு முகாம் (குடியிருப்பு) அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க

செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 2... மேலும் பார்க்க