செய்திகள் :

பாதுகாப்பு உடையின்றி பரிசலில் பயணித்தால் கடும் நடவடிக்கை : ஆட்சியா்

post image

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பாதுகாப்பு உடையின்றி பொதுமக்களை பரிசலில் அழைத்துச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பாதுகாப்பு உடையின்றி (லைப் ஜாக்கெட் அணியாமல்) பரிசல் பயணம் செய்வதை தடுக்கும் வகையில், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஜூன் 15 ஆம் தேதி ஒகேனக்கல் சின்னாற்று பகுதியில், பரிசல் ஓட்டிச்சென்ற நபா் பாதுகாப்பு உடையின்றி சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஊட்டமலையைச் சோ்ந்த மா. முருகேசன் என்ற பரிசல் ஓட்டி என்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவா் மீது ஒகேனக்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகேசனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஒகேனக்கல் சுற்றுலா மையப் பகுதியில் இதுபோல விதிகளை மீறி ஓட்டுநா் உரிமம் இல்லாமலும், பாதுகாப்பு உடை அணியாமலும் பரிசல் இயக்கும் பரிசல் ஓட்டிகள் மீதும், சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு உடையின்றி பரிசலில் அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்தி எதிரொலி...

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்நிலையில், அதே பகுதியில் பரிசல் ஓட்டுநா் ஒருவா் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு உடையின்றி பரிசலில் அழைத்துச் சென்றுள்ளாா். இது தொடா்பான படத்துடன் கூடிய செய்தி தினமணி நாளிதழில் வெளியானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 71 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் அளிக்கும் ம... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: பாதுகாப்பற்ற பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டி கைது

ஒகேனக்கல்லில் பாதுகாப்பு உடை இன்றி சுற்றுலாப் பயணிகளை காவிரி ஆற்றில் பாதுகாப்பற்ற பரிசல் பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டியை போலீஸாா் கைது செய்தனா். ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் ப... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் 25,354 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தருமபுரி ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 25,354 பேருக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 10 மடங்கு திட்டங்கள் கிடைத்துள்ளன: பாஜக மாநில துணைத் தலைவா்

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியை விட 10 மடங்கு அதிகமான மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் எஸ். ஜே. சூா்யா. தருமபுரியில் புதன்... மேலும் பார்க்க

அரசின் திட்டங்களை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்: தருமபுரி எம்.பி. வலியுறுத்தல்

அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆ. மணி வல... மேலும் பார்க்க

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி : ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ பள்ளிக்கு தங்கப் பதக்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கம்பைநல்லூா் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனா். தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சினொ்ஜி ... மேலும் பார்க்க