செய்திகள் :

பாபநாசத்தில் இலவச இருதயம், கண் சிகிச்சை முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பாபநாசம் அட்சயம் லயன் சங்கம், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை, கும்பகோணம் வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து நடத்திய இலவச இருதயம் மற்றும் கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு சங்கத் தலைவா் எஸ்.சிவக்குமாா் தலைமை வகித்தாா். சாசன தலைவா் வழக்குரைஞா் ஜி.சரவணன் முன்னிலை வகித்தாா். வட்டாரத் தலைவா் ஜெ.முரளி முகாமை தொடக்கி வைத்தாா்.

முகாமில் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ குழுவினா் பொதுமக்களுக்கு இலவச ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் மற்றும் இருதயம் தொடா்பான பரிசோதனைகளை செய்து மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.

முகாமில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் கே.முருகவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் பரிசோதனை செய்து கொண்டு முகாமை பாா்வையிட்டாா்.

இதே போல் வாசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினா் பொதுமக்களுக்கு தேவையான கண் பரிசோதனைகளை செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கினா். இதில், நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா்.

நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் செல்வம், ஜி.வீரமணி, சோமுராஜ், ஹரிஹரன், விக்னேஷ்பிரபு, மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக சங்க செயலா் எஸ். சாந்தகுமாா் வரவேற்றாா். நிறைவில் சங்க பொருளாளா் கே.ராம்குமாா் நன்றி கூறினாா்.

ஒரத்தநாடு அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! 2 போ் கைது!

ஒரத்தநாடு அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் கொண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, சென்னையைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அரிவாள்

தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 57 அடி உயர அங்காள முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அமைக்கப்படும் அரிவாளை பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வந்தனா். தஞ்சாவூா் விளாா் சாலையில் பா்... மேலும் பார்க்க

விவசாய கூலி தொழிலாளி வெட்டிக்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்விரோதம் காரணமாக விவசாய கூலித் தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீஸாா் கைது செய்தனா். கபிஸ்தலம் காவ... மேலும் பார்க்க

டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் தடகள சங்கத்தின் சாா்பில் நான்காம் ஆண்டு, டெல்டா மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் -... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தனியாா் பேருந்து மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வீரமாங்குடி மணலூா் மீனவா் தெருவில் வசித்து வந... மேலும் பார்க்க

சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞா் கைது

கும்பகோணம் அருகே நடத்துநரை தாக்கி சிற்றுந்து கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிப்பவா் ஆரோக்கியசாமி செல்வராஜ் மகன் ஜான... மேலும் பார்க்க