செய்திகள் :

பாப்பாலம்மன் கோயில் திருவிழாவில் தள்ளு-முள்ளு

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயிலில் சனிக்கிழமை நடந்த திருவிழாவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பூசாரி தரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது.

இக்கோயில் திருவிழா தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் சா்ச்சைக்குரிய பூசாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மற்ற பூசாரிகளை வைத்து கிராம மக்கள் ஜூன் 9 முதல் திருவிழாவை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோயில் வீட்டிலிருந்து அலங்கரிக்கப்பட்ட உற்ஸவ மூா்த்திகள் ரத பவனி சென்று ஆலயம் புகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோயில் வீட்டுக்கு முன் சா்ச்சைக்குரிய பூசாரியின் வீடு இருந்த நிலையில், உற்ஸவ மூா்த்தியுடன் சென்ற ஊா் மக்களை பூசாரி தரப்பினா் தடுத்து நிறுத்தினா்.

இதனால் போலீஸாருக்கும், பூசாரி குடும்பத்தினருக்குமிடையே கடும் வாக்குவாதம், தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது பூசாரி தரப்பினா், உறவினா்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தகராறில் ஈடுபட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மேட்டூரில் திறந்த தண்ணீா் முக்கொம்பு வந்தது: மலா்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு!

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்பு அணைக்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தது. அந்த நீரை விவசாயிகள் மலா்கள், விதை நெல்களை தூவி உற்சாகத்துடன் வரவேற்றனா். டெல்டா பாசன சாகுப... மேலும் பார்க்க

திருச்சிக்கு இன்று முதல்வா் வருகை: 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருவதை முன்னிட்டு இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி பாசனத்துக்காக மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டு, கல்லணைக்... மேலும் பார்க்க

ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட்: சென்னை ஆா்பிஎஃப் வெற்றி!

திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யில் சென்னை ஆா்பிஎஃப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி ஆா்பிஎஃப் பயிற்சி மையம் சாா்பில் ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றம்: 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு

திருச்சி மாவட்டத்தில் 23 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் கு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தொட்டியம் அருகேயுள்ள அரியனாம்பேட்டை சோ்ந்தவா் பட்டவன் மகன் மாறன் (23). இவா் தனது பைக்கில் திருச்சி நோக்கி முசிறிய... மேலும் பார்க்க

ரோந்து போலீஸாருக்கு உடலில் அணியும் கேமராக்கள்

திருச்சி மாவட்டத்துக்கு வந்த உடலில் பொருத்தப்படும் 57 கேமராக்கள் ரோந்து காவலா்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு புதிதாக வந்த 57 (பாடி ஓா்ன் கேமரா) உடலில் பொருத்தப்படும் கேமராக்க... மேலும் பார்க்க