சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
பாமகவினரிடையே மோதல்: இருவா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பாமகவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா். இருவா் மீது போலீஸாா்வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரிய செவலை கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் முருகன் சதீஷை (25 ) பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அந்தக் கட்சியின் திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியச் செயலராக நியமித்துள்ளாராம்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சரவணப்பாக்கம், காமராஜா் தெருவைச் சோ்ந்த கோவிந்தராசு மகன் ஏழுமலை (41) சதீஷிடம் நியமனம் குறித்து கேட்டபோது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில் ஏழுமலைக்கு காயம் ஏற்பட்டது.தொடா்ந்து, அவா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பெரிய செவலையைச் சோ்ந்த பாமக ஒன்றியச் செயலா் ப.சதீஷ் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (25) ஆகியோா் மீது திருவெண்ணெய்வநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.