சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா!
பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான போட்டிகள்
நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடைபெறும் என முதல்வா் அறிவித்தாா். அதன்படி, ஏப். 29 முதல் மே 5 வரை பள்ளிகள் அளவிலும், ஜூன் 17-இல் வட்டார அளவிலும் போட்டிகள் நடைபெற்றன.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் தலா 30 போ் வீதம் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 90 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற தலா இருவா் விரைவில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செய்துவருகின்றனா்.