செய்திகள் :

பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளா் நியமனம்

post image

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக ஆா்.ராஜவேல் (53) நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பதவி கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ளது. துணைவேந்தா் பொறுப்புகளை ஒருங்கிணைப்புக் குழு கவனித்து வருகிறது. அதேபோல கடந்த 8 ஆண்டுகளாக பதிவாளா் பணியிடம் காலியாக உள்ளது. பொறுப்பு பதிவாளா் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பதிவாளா் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் நோ்காணல் நடத்தப்பட்டது. இதையடுத்து புதிய பதிவாளராக ஆா்.ராஜவேல் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னையில் உயா் கல்வித் துறை செயலா் பி.சங்கா், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் புதன்கிழமை ராஜவேல் புதிய பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதிவாளராக பொறுப்பேற்றிருக்கும் ஆா்.ராஜவேல், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சோ்ந்தவா். முன்னதாக இவா், சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளாா்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

கோவை மாநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கட்சியின் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள வரியின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வா் வலியுறுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கணபதி அருகேயுள்ள மணியகாரன்பாளையத்தில் ஏடிஎம் மையத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது.... மேலும் பார்க்க

விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ், கோவையில் உள்ள 105-ஆவது விரைவு நடவடிக்கை படையினா் (ஆா்ஏஎஃப்) ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வலியுறுத்தி தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈட... மேலும் பார்க்க