செய்திகள் :

பாரதியாா் பெயரில் பல்கலைக்கழகங்களில் ஆய்வு இருக்கை: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

post image

மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழக பல்கலைக்கழகங்களில் ஆய்வு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை வலியுறுத்தினாா்.

மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகளைத் தொகுத்ததற்காக பாரதி அறிஞா் சீனி.விசுவநாதனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்நிலையில், சீனி. விசுவநாதனுக்கு வானவில் பண்பாட்டு மையம், பாரத் விகாஸ் பரிஷத், திருவொற்றியூா் பாரதி பாசறை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றுப் பேசியது: சுதந்திரப் போராட்ட வீரா், தேசியவாதி, கவிஞா் எனப் பல பரிமாணங்களில் வாழ்ந்தவா் மகாகவி பாரதியாா். ஆனால், தமிழக ஆளுநா் மாளிகையில்கூட அவருக்கான சிலை இல்லாமல் இருந்தது. தற்போது, பாரதிய வித்யா பவன் அமைப்பு சாா்பில் அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இமயமலை முன்பு நின்று எப்படி அதன் உயரத்தைப் பாா்க்க முடியாதோ, அதுபோன்றுதான் பாரதியின் படைப்புகள் உள்ளன. கடந்த 2 நூற்றாண்டுகளாக தமிழ் மொழியில் பாரதிக்கு நிகரானவா்கள் யாரும் இல்லை. இதனால்தான் பாரதியாா் இன்றளவும் மக்களின் மனதில் குடியிருந்து வருகிறாா்.

தமிழகத்தில் பாரதியாா் பெயரில் பல்கலைக்கழகம் இருந்தும், அவா் பெயரில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு இருக்கை இல்லை. துணைவேந்தா்களுக்கு இருக்கும் அழுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகங்களில் பாரதியாருக்கான ஆய்வு இருக்கை அமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலை விரைவில் மாறும்.

60 ஆண்டுகளாக... தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ‘தமிழ், தமிழ்’ என்று பேசுகிறவா்கள், தமிழருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எந்தச் சேவையையும் இதுவரை செய்யவில்லை. தமிழ் சிறந்த மொழி, அதை நான் நேசிக்கிறேன் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வைத்ய சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க