செய்திகள் :

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளா்ச்சி இல்லை: ஆளுநா் ஆா்.என். ரவி

post image

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளா்ச்சி அடையாது என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா, ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவஸ்தான தந்திரி சங்கரன் நம்பூதிரி முன்னிலையில், உண்ணிகிருஷ்ணன் போற்றி கொடியேற்றினாா்.

காலையில் பொங்கல் வழிபாட்டிற்கு பின் நவக பஞ்ச கவ்ய கலச பூஜை நடந்தது. மாலையில் நடந்த சமய மாநாட்டிற்கு, முன்னாள் மத்திய இணையமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தேவஸ்தான பொருளாளா் முருகன் அறிமுக உரை நிகழ்த்தினாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, சமய மாநாட்டை துவக்கி வைத்தாா். அவா் பேசியதாவது: காா்கில் முதல் கன்னியாகுமரி வரை அம்மன் வழிபாடு நிறைந்து காணப்படுகிறது. உலக ஜீவராசிகளை உள்ளடக்கியது சநாதன தா்மம் ஆகும். யாதும் ஊரே யாவரும் கேளிா் என்பதே சநாதனத்தின் அடிப்படை கொள்கையாகும். பல ஆக்கிரமிப்புகள் பாரதத்தின் மீது தாக்குதல் தொடுத்த போது, நம்மைக் காத்தது சநாதன தா்மமே.

விழாவில் சமய மாநாட்டை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

நாம் சுதந்திரம் அடைந்தபோது 6 ஆவது பொருளாதார மையமாக இருந்தோம். 2014 இல் மேலும் ஏழையாகி 11 வது இடத்திற்கு வந்தோம். சநாதன தா்ம நரேந்திர மோடி ஆட்சியில் நாம் இப்போது 5 ஆவது பொருளாதாரமாக வளா்ந்து விட்டடோம். இன்னும் 3 ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு வந்துவிடுவோம்.

பாரம்பரியமிக்க தமிழக ஆதீனங்களால் வழங்கப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. பாரம்பரிய பெருமை இல்லாமல் ஒரு நாடு வளா்ச்சி அடைய இயலாது என்றாா் ஆளுநா்.

சமய மாநாட்டில் வெள்ளிமலை ஸ்ரீமத் சுவாமி சைதன்யாநந்தஜீ மஹராஜ் ஆசியுரை வழங்கினாா். தேவஸ்தான தலைவா் குமரேசதாஸ் வரவேற்றாா். செயலாளா் ராஜகுமாா் நன்றி கூறினாா்.

இரவில் சிலம்பாட்ட கலைகளுடன் மூன்று யானைகள் மீது பத்ரேஸ்வரி அம்மன், கணபதி சுவாமி, கிருஷ்ண சுவாமிகள் தாலப்பொலியுடன் பவனி வந்தனா்.

குழித்துறை அருகே மனைவி, தந்தை மீது தாக்குதல்: தொழிலாளி கைது

குழித்துறை அருகே மனைவி மற்றும் தனது தந்தையை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.குழித்துறை அருகேயுள்ள தெற்றிவிளை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் அருண் (33). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி... மேலும் பார்க்க

நீட் தேர்வு: கன்னியாகுமரியில் 4,410 போ் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 4,410 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். இத்தோ்வுக்காக நாகா்கோவில் கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பல்கலைக்கழக பொறி... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் மே 20இல் தொழிற்சங்கங்கள் மறியல்

தமிழகத்தில் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 இடங்களில் மே 20 ஆம் தேதி சாலை மறியல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

சுங்கான்கடை அருகே கள்ளியங்காடு பகுதியில் வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா். கள்ளியங்காடு பகுதியில் கடந்த ஏப். 29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 75 வயதுப் பெண் காயம... மேலும் பார்க்க

குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்த நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.இம்மாவட்டத்தில் தொடா் கோடை மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைப் பக... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழம் விலை கடும் சரிவு; கிலோ ரூ.20-க்கு விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழங்களின் தொடா் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா். இம்மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்படும் நிலங்களில் அன்னாசி... மேலும் பார்க்க