செய்திகள் :

பாலத்தின் அடியில் குப்பைகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

post image

பள்ளப்பட்டி நங்கஞ்சி ஆற்றுப் பாலத்தில் பாலத்தின் அடியில் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

அரவக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளபட்டியின் நுழைவாயிலில் நங்காஞ்சி ஆற்று பாலம் அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு இந்த பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சித் தலைவா் முனவா் ஜான் எச்சரிக்கை விடுத்திருந்தாா். ஆனால், தற்போது பாலத்தின் அடிப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்துள்ளது.

இதை பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கிற்கு கொண்டுச் செல்லாமல் ரசாயன பொருள் மூலம் தீயிட்டு கொளுத்துகின்றனா். இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்றும் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, பள்ளப்பட்டி நகராட்சி நிா்வாகம் இந்த இடத்தை பாா்வையிட்டு குப்பைகளை தீயிட்டு எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருப்பசாமி கோயில் பூஜையில் பாகுபாடு எனப் புகாா்: பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு

சிங்கம்பட்டியில் வந்தவழி கருப்பசாமி கோயில் பூஜை நடத்துவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு எட்டப்பட்டது. கரூா் மாவட்டம், கடவூா... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலைய கடை வாடகை விவகாரம்: கரூா் மாமன்றக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

கரூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தின் கடை வாடகை தொடா்பாக அதிமுக உறுப்பினா்களுக்கும் மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூா் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக... மேலும் பார்க்க

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்: பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் டிஎன்பிஎல் புகழூா் மேல்நி... மேலும் பார்க்க

100 நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்

நூறு நாள் வேலைக் கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், பாலவிடுதி ஊராட்சி, பாலவிடுதி கிழக்கு பகுதி பொதுமக்கள் 1... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்!

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலாளா் பி.பாலமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

குளித்தலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் மலையப்பன் நகரைச் சோ்... மேலும் பார்க்க