செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

குளித்தலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் மலையப்பன் நகரைச் சோ்ந்த ராமா் மகன் பிரகாஷ்(27). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு டிச.30-ஆம்தேதி பக்கத்துவீட்டைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் குற்றவாளி பிரகாஷுக்கு 5ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டாா். இதையடுத்து பிரகாஷ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாலத்தின் அடியில் குப்பைகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

பள்ளப்பட்டி நங்கஞ்சி ஆற்றுப் பாலத்தில் பாலத்தின் அடியில் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். அரவக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளபட்டியின... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்!

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலாளா் பி.பாலமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பகுதியில் கனமழை

அரவக்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கன மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை இரவு லேசான மழை பெய்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் முதலே... மேலும் பார்க்க

போலீஸாரைக் கண்டித்து ஆட்சியரகத்தை விசிகவினா் முற்றுகை

போலீஸாரைக் கண்டித்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க

தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் பிடியாணை

தென்னிலை அருகே அடிதடி வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் முருகேசன் (59). இவா், கரூா் மாவட்டம் தென்னிலை ... மேலும் பார்க்க

கரூா் ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

தனது கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கே.உடை... மேலும் பார்க்க