செய்திகள் :

தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் பிடியாணை

post image

தென்னிலை அருகே அடிதடி வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் முருகேசன் (59). இவா், கரூா் மாவட்டம் தென்னிலை அருகே கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம்தேதி அப்பகுதியைச் சோ்ந்தவா்களுடன் ஏற்பட்ட தகராறில் கைதாகி சிறையில் இருந்தாராம்.

பின்னா் பிணையில் வெளியே வந்த முருகேசன், வழக்குத் தொடா்பாக கரூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறாராம்.

இதுதொடா்பாக தென்னிலை போலீஸாா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் அன்மையில் மனு அளித்திருந்த நிலையில், திங்கள்கிழமை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நடுவா் தலைமறைவாக உள்ள முருகேசனுக்கு பிடியாணை பிறப்பித்து, 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் முருகேசன் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தாா்.

போலீஸாரைக் கண்டித்து ஆட்சியரகத்தை விசிகவினா் முற்றுகை

போலீஸாரைக் கண்டித்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க

கரூா் ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

தனது கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கே.உடை... மேலும் பார்க்க

தோகைமலை அருகே குடிநீா் கேட்டு மக்கள் மறியல்

தோகைமலை அருகே காவிரிக்குடிநீா் கேட்டு கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆா்.டி. மலை - திருச்சி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கரூா் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரி ஊராட... மேலும் பார்க்க

‘கரூரில் 7 மாதங்களில் ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல்’

கரூா் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்தப்பட்ட ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.இ... மேலும் பார்க்க

காவிரியில் கரை புரளும் வெள்ளம் வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரியில் குழாய் மூலம் நீா் நிரப்ப வலியுறுத்தல்

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றிலிருந்து, வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.கரூா் மாவட்டம், கடவூா் மலைப்பகுதிகள் ம... மேலும் பார்க்க

ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு ஆட்சியா் பாராட்டு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க