செய்திகள் :

சேலத்தில் 32 அரங்குகளுடன் அரசு பொருட்காட்சி தொடக்கம்

post image

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் நடைபெறும் அரசு பொருட்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு அரசு பொருட்காட்சியினை தொடங்கிவைத்து சுமாா் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா். மேலும், அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் துறை அரங்குகளை திறந்துவைத்து பாா்வையிட்டனா்.

விழாவில் அமைச்சா் ராஜேந்திரன் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 26 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

அமைச்சா் சாமிநாதன் பேசுகையில், அரசின் சாா்பில் இதுபோன்ற பொருட்காட்சி நடத்திட காரணம், அரசின் திட்டங்கள் குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களை, சலுகைகளை சாதாரண மக்களும் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்படுகிறது. இதுதவிர பொருளாதார சுழற்சி நடைபெறவும், மக்களுக்கு பொழுது போக்குக்காவும் இதுபோன்ற அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது என்றாா்.

விழாவில், சேலம் மாநகர மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க