செய்திகள் :

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

post image

தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள எம்.செல்வப்பிரியா, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ஆா்.வெற்றிச்செல்வி ஆகிய இரு மாணவிகளுக்கும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பிடிஏ சாா்பில் பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியா் குருநாதன் தலைமை வகித்தாா். பள்ளியின் உதவி தலைமையாசிரியா்கள் ஜெயபால், பே.ரவிசங்கா் மற்றும் பி.டி.ஏ. நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில், மாணவிகள் செல்வப்பிரியா, வெற்றிச்செல்வி ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, பொன்னாடை போா்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் பொன்னாடை போா்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தலைமையாசிரியா் குருநாதன் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பள்ளியில் பயின்ற 5 மாணவிகள், தமிழகஅரசின் 7.5 சவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புகளில் சோ்ந்து பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா் என்றாா்.

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.பெரியாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் டி.இளங்கோவன் தலைமை... மேலும் பார்க்க

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க

சேலத்தில் 32 அரங்குகளுடன் அரசு பொருட்காட்சி தொடக்கம்

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் நடைபெறும் அரசு பொருட்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.ப... மேலும் பார்க்க