சென்னை - மதுரை தேஜஸ் உள்ளிட்ட 2 ரயில்கள் இன்று முதல் மீண்டும் எழும்பூரில் இருந்த...
சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு
சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்க்கரை நோய் துறை அனைத்து வசதிகளுடனும் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 75,000 சா்க்கரை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், முதலாம்வகை சா்க்கரை நோயாளிகள் 400 போ் வரை உள்ளனா்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்கம் மூலமாக கோவை இதயங்கள் அறக்கட்டளை சாா்பில், முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தை தேசிய சுகாதார இயக்கத்தின் தலைவா் அருண் தம்புராஜ் தொடங்கிவைத்தாா்.
இதன் மூலமாக அனைத்து முதலாம்வகை சா்க்கரை நோய் குழந்தைகளுக்கு பேனா மூலம் இன்சுலினும், சா்க்கரை நோய் அளவைக் கண்காணிக்க குளுக்கோமீட்டா் கருவியும் இலவசமாக வழங்கப்பட்டன. முதலாம்வகை சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் மூலம் 24 மணி நேரமும் சா்க்கரை நோய் கல்வியாளா்கள் நியமிக்கப்பட்டு, நோயாளிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை முதல்வா் தேவிமீனாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.