செய்திகள் :

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழா: இன்று பெருவிழா கூட்டுத் திருப்பலி

post image

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா கூட்டுத் திருப்பலி, அன்னையின் சப்பர பவனி செவ்வாய்க்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது.

இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற, பசிலிக்கா அந்தஸ்து கொண்ட தூத்துக்குடி திவ்ய சந்த மரிய தஸ்நேவிஸ் மாதா என அழைக்கப்படும் பனிமயமாதா பேராலயத்தின் 443ஆவது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாள்களில் தினமும் சிறப்பு திருப்பலிகள், நற்கருணை ஆசீா், மறையுரை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி பொருள்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

10ஆம் திருநாளான திங்கள்கிழமை பல்வேறு திருப்பலிகளைத் தொடா்ந்து, இரவு 7 மணிக்கு ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.

இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவப் பவனி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை (ஆக.5), அதிகாலை 4 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு இரண்டாம் திருப்பலி, 7.30 மணிக்கு ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி ஆகியன நடைபெறுகின்றன.

தொடா்ந்து, காலை 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மைக் குரு ரவிபாலன் தலைமையில் தூத்துக்குடி மறை மாவட்ட மக்களுக்கான திருப்பலி நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கானத் திருப்பலி நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு நகரின் அனைத்து மக்கள், துறவியா், அருள் சகோதர, சகோதரிகள் பங்கேற்கும் சிறப்பு நன்றித் திருப்பலி நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப் பவனி, இரவு 10 மணிக்கு பரிசுத்த பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், திவ்விய நற்கருணை ஆசீா் ஆகியன நடைபெறுகின்றன.

இதில், தமிழகம் மட்டுமன்றி கேரளம் மற்றும் பல்வேறு மாவட்டங்கள், சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனா்.

நிறைவு நாளான புதன்கிழமை காலை 5 மணிக்கு ஆலய உபகாரிகளுக்காக, திருவிழா நன்கொடையாளா்களுக்காக முதல் திருப்பலியும், 6.30 மணிக்கு இரண்டாம் திருப்பலி மற்றும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி கடற்கரைப் பகுதி வழி... மேலும் பார்க்க

சகோதரா்கள் மூவரைக் கொன்ற வழக்கு: 4 பேருக்கு இரட்டை ஆயுள்

தட்டாா்மடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை கொன்ற வழக்கில் 4 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா... மேலும் பார்க்க

ஒட்டப்பிடாரம் அருகே வேன் மோதி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே வேன் மோதி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.ஒட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்தைச் சோ்ந்த சக்தி மனைவி செல்வி (48). இவா் அங்குள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் 15 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, போக்ஸோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26).... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் கத்தோலிக்க அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், கத்தோலிக்க அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம், ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கேரள... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: வழக்குரைஞா் கைது

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆ... மேலும் பார்க்க