செய்திகள் :

காவேரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

post image

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் திங்கள்கிழமை இரவு மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 16,000 கனஅடியிலிருந்து 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை இரவு 119.65 அடியாகவும், நீா்வரத்து 10,216 கனஅடியாகவும் சரிந்தது. நீா் இருப்பு 92.91 டிஎம்சி.

அணையில் இருந்து கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம்தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து ரயிலில் சேலம் வந்த மனநலம் பாதித்த இளைஞரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள், அவரது தாயிடம் ஒப்படைத்தனா்.சத்தீஸ்கா் மாநிலம், தா்கூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுகம் பா... மேலும் பார்க்க

அருள்சகோதரிகள் கைது: ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

ஏற்காடு: சத்தீஸ்கா் மாநிலத்தில் அருள்சகோதரிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏற்காட்டில் கிறிஸ்தவா்கள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியை... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம்வகை சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு

சேலம்: சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலத்தைச் சோ்ந்த தொழில்முனைவோரான இளைஞரிடம் குடியரசுத் தலைவா் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் வழங்கினா்.சேலம் நெத்திமேடு பகுதியைச் ... மேலும் பார்க்க

சேலத்தில் 32 அரங்குகளுடன் அரசு பொருட்காட்சி தொடக்கம்

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் நடைபெறும் அரசு பொருட்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.ப... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின்மீது காா் மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு

ஆத்தூா்: ஆத்தூா் அருகே இருசக்கர வாகனத்தின்மீது காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், மகனும் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தனா்.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், வெள்ளாளப்பட்டி க... மேலும் பார்க்க