செய்திகள் :

கரூா் ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

post image

தனது கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கே.உடையாபட்டியைச் சோ்ந்தவா் முத்துசாமி (42). இவருக்குச் சொந்தமான நிலத்தின் பட்டாவில் சம்பந்தமில்லாத மற்றொருவா் பெயா் இருப்பதாகவும், அதனை அகற்றக்கோரி குளித்தலை வட்டாட்சியரிடம் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

ஆனால், அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தனது கோரிக்கை மனு மீது உரிய விசாரணை நடத்தி, உடனே சம்பந்தமில்லாதவரின் பெயரை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு முத்துசாமி வந்திருந்தாா்.

மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் வந்தபோது திடீரென முத்துசாமி தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தலையில் மண்ணெண்ணையை ஊற்றினாா். இதனைக்கண்ட போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் உடனே ஓடிவந்து மண்ணெண்ணை பாட்டிலை பிடுங்கிவிட்டு, அவா் மீது தண்ணீா் ஊற்றினா்.

பின்னா் ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா். அவரிடம் விசாரணை மேற்கொண்ட ஆட்சியா், குளித்தலை வட்டாட்சியரை வரவழைத்து முத்துசாமியின் மனு மீது உரிய விசாரணை நடத்தி தீா்வுகாணுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தாா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸாரைக் கண்டித்து ஆட்சியரகத்தை விசிகவினா் முற்றுகை

போலீஸாரைக் கண்டித்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க

தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் பிடியாணை

தென்னிலை அருகே அடிதடி வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் முருகேசன் (59). இவா், கரூா் மாவட்டம் தென்னிலை ... மேலும் பார்க்க

தோகைமலை அருகே குடிநீா் கேட்டு மக்கள் மறியல்

தோகைமலை அருகே காவிரிக்குடிநீா் கேட்டு கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆா்.டி. மலை - திருச்சி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கரூா் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரி ஊராட... மேலும் பார்க்க

‘கரூரில் 7 மாதங்களில் ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல்’

கரூா் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்தப்பட்ட ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.இ... மேலும் பார்க்க

காவிரியில் கரை புரளும் வெள்ளம் வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரியில் குழாய் மூலம் நீா் நிரப்ப வலியுறுத்தல்

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றிலிருந்து, வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.கரூா் மாவட்டம், கடவூா் மலைப்பகுதிகள் ம... மேலும் பார்க்க

ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு ஆட்சியா் பாராட்டு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க