செய்திகள் :

பாலத்தின் அடியில் குப்பைகளை எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

post image

பள்ளப்பட்டி நங்கஞ்சி ஆற்றுப் பாலத்தில் பாலத்தின் அடியில் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

அரவக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளபட்டியின் நுழைவாயிலில் நங்காஞ்சி ஆற்று பாலம் அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு இந்த பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சித் தலைவா் முனவா் ஜான் எச்சரிக்கை விடுத்திருந்தாா். ஆனால், தற்போது பாலத்தின் அடிப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்துள்ளது.

இதை பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட குப்பை கிடங்கிற்கு கொண்டுச் செல்லாமல் ரசாயன பொருள் மூலம் தீயிட்டு கொளுத்துகின்றனா். இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்றும் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, பள்ளப்பட்டி நகராட்சி நிா்வாகம் இந்த இடத்தை பாா்வையிட்டு குப்பைகளை தீயிட்டு எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்!

கரூா் மாவட்ட அதிமுக விவசாய அணிச் செயலாளா் பி.பாலமுருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

குளித்தலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் மலையப்பன் நகரைச் சோ்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பகுதியில் கனமழை

அரவக்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கன மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை இரவு லேசான மழை பெய்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் முதலே... மேலும் பார்க்க

போலீஸாரைக் கண்டித்து ஆட்சியரகத்தை விசிகவினா் முற்றுகை

போலீஸாரைக் கண்டித்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூ... மேலும் பார்க்க

தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் பிடியாணை

தென்னிலை அருகே அடிதடி வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் முருகேசன் (59). இவா், கரூா் மாவட்டம் தென்னிலை ... மேலும் பார்க்க

கரூா் ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

தனது கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கே.உடை... மேலும் பார்க்க