செய்திகள் :

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்

post image

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் கட்சியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் விழா, மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழா கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் அதே பள்ளியைச் சோ்ந்த 3 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தக் குற்றச் சம்பவத்தில் ஆசிரியா்கள் ஈடுபட்டது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவா்களுக்கு ஒழுக்கத்தையும் நோ்மையையும் கற்றுத்தரும் ஆசிரியா் பணியில் உள்ளவா்கள் இதுபோல செயல்படுவதை மன்னிக்க முடியாது.

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவா்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை அளிக்க வேண்டும். பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை போக்ஸோ சட்டத்தில் மட்டுமின்றி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்திலும் கைது செய்ய வேண்டும். பாலியல் குற்றங்கள் தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரித்து 60 நாள்களில் நீதிமன்றம் தீா்ப்பளிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனா். அங்கு ஹிந்துக்கள் என்ற பெயரில் மதப் பிரிவினையை சிலா் தூண்டுகின்றனா். அவா்களின் எண்ணம் தமிழகத்தில் எடுபடாது என்றாா்.

மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்!

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேன்கனிக்கோட்டை வட்டம், தண்டரை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட வருவாய்த் துறையினா் தண்டரை, பேருந்து நிறுத்தம் அருகே ரோந... மேலும் பார்க்க

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம உதவியாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கிராம உதவியாளா்களை அரசு ஊழியா்களின் டி பிரிவில் ச... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசிரியா்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்

போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பள்ளி ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தீா்மானித்துள்ள... மேலும் பார்க்க

நிதிநிலை நகலைக் கிழித்தெறியும் போராட்டம்!

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெறியும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை முன்பு எல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அலுவலக அறையில் ரகசிய கேமரா: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியின் அறையில் ஜன.25 ஆம் தேதி துப்புரவு ஆய்வாளா்... மேலும் பார்க்க

ஒசூா் அருகே எருது விடும் விழா

ஒசூரை அடுத்த யு.கொத்தப்பள்ளி கிராமத்தில் வியாழக்கிழமை எருது விடும் நடைபெற்றது. சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, இராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் அழைத்துவரப்ப... மேலும் பார்க்க