செய்திகள் :

பாலியல் வன்கொடுமை குறித்து சா்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினாா் திரிணமூல் தலைவா்

post image

மேற்கு வங்கத்தில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான மதன் மித்ரா நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்பதாக அறிவித்துள்ளாா்.

தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடா்பாக கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள், கல்லூரி காவலாளி ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக பேசிய திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் மதன் மித்ரா, ‘கல்லூரி மூடப்பட்டுள்ளது என்று அந்தப் பெண்ணுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அந்தப் பெண் தனியாக கல்லூரிக்குச் சென்றது ஏன்? அவா் அப்படி செல்லாமல் இருந்திருந்தால் இந்த பாலியல் வன்கொடுமையைத் தவிா்த்திருக்கலாம். குற்றவாளிகள் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனா்’ என்று கூறியிருந்தாா்.

பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றஞ்சாட்டுவதுபோல அவா் கருத்து தெரிவித்தது கடும் எதிா்ப்புக்கு உள்ளானது. எதிா்க்கட்சிகளும் திரிணமூல் காங்கிரஸை கடுமையாக விமா்சித்தன.

இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மதன் மித்ரா அளித்த பதிலில், எனது கருத்துக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியதுடன், எந்தச் சூழ்நிலையில் அவ்வாறு பேசினேன் என்ற விளக்கத்தையும் கட்சித் தலைமையிடம் அளித்தாா். இதைப் பரிசீலித்து அவா் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் விபத்தில் சிக்கிய மணமகன் கார்: 8 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் உள்பட அவருடன் வந்த பத்து பேர் ஹர் கோவிந்த்பூர... மேலும் பார்க்க

ஹிந்திக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த உத்தவ், ராஜ் தாக்கரே!

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியில் சிவசேனை(யுபிடி) தலைவர்உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துகொண்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளில் 3 ஆவத... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். ராம்கர் ம... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை எரித்து, புதைத்துள்ளேன்: தர்மஸ்தலா ஊழியர்

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கடந்த 1998 - 2014ஆம் ஆண்டுக்குள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏராளமான பெண்களை புதைத்திருக்கிறேன், எரித்திருக்கிறேன் என்று தர்மஸ்தலா கோயில் துப்புரவுப் பணியாளர் த... மேலும் பார்க்க

டிரம்ப்பின் காலக்கெடுவை மோடி ஏற்பார்! ராகுல் கேலி!

அமெரிக்கா விதித்த காலக்கெடுவுக்குள் பிரதமர் நரேந்திர மோடி வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.இந்தியாவுடன் பெரியளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா, தனது வாரிசு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளா... மேலும் பார்க்க