செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

post image

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் (51) கடந்த 2017ஆம் ஆண்டுவரை இருமுறை எம்எல்ஏவாக பணியாற்றியுள்ளார். சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்த பகவான் சர்மா, தற்போது ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியில் இருந்து வருகிறார். இவர், 41 வயது பெண்ணுடன் நெருங்கிப் பழகிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவருக்கும் 8 வயது குழந்தையும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரில், "வியாபார நிமித்தமாக பகவான் சர்மா ஆக. 14ஆம் தேதி பெங்களூர் வந்திருந்தார். என்னையும், என் மகனையும் பெங்களூருக்கு வருமாறு கூறியிருந்தார். அதன்பேரில் நாங்களும் பெங்களூர் வந்திருந்தோம். சித்ரதுர்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் சென்றார். ஆக. 17ஆம் தேதி கெம்பே கெளடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் எங்களை தங்கவைத்தார். அப்போது எனது விருப்பத்துக்கு மாறாக, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றார். பாலியல் ரீதியான விருப்பத்துக்கு இணங்காவிட்டால், என்னைக் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டினார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பகவான் சர்மா மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸôர் தெரிவித்தனர்.

எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்

பஞ்சாப் மாநிலம் மாண்டியாலா கிராமத்தில் எல்பிஜி டேங்கர் லாரியும் டிரக் வாகனமும் மோதியதில், எல்பிஜி டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானார். 20 பேர் படுகாயமடைந்தனர்.ஹோஷியார்பூர் - ஜலந்தர் நெ... மேலும் பார்க்க

செப். 3, 4-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நா... மேலும் பார்க்க

அமித் ஷா மீது அவதூறு: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு செப். 9-க்கு ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

‘உமீத்’ வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதன்மூலம், தோ்தலில் தென... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்... மேலும் பார்க்க