தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
பாலியல் விவகாரத்தில் தலைமையாசிரியா் கைது: 2-ஆவது நாளாக மாணவா்கள் பள்ளியை புறக்கணித்தனா்
பழையப்பாளையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடா்ந்து வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக மாணவா்கள் பள்ளியை புறக்கணித்தனா்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரியை அடுத்த பழையப்பாளையத்தில் ஆதிதிராவிட நலத் தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றன.
இதில், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் நாகராஜன், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வியாழக்கிழமை, மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாரால் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளாா்.
நாகராஜன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பள்ளிக்கு பணிக்கு வரும் வரை, தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி பெற்றோா்கள் போராடி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை இருப்பள்ளிகளிலும் ஆசிரியா்கள் மட்டுமே பணிக்கு வந்தனா். இரு பள்ளிகளிலும் தலா ஒரு மாணவா் மட்டுமே வந்தனா்.