செய்திகள் :

பாலி சென்ற ஏர் இந்தியா விமானம் தில்லிக்கே திரும்பியது!

post image

தில்லியில் இருந்து இந்தோனேஷியாவின் பாலிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் தில்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

தில்லி விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை பாலிக்கு ஏர் இந்தியாவின் ஏஐ2145 விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், பாலி விமான நிலையத்தை ஏர் இந்தியா விமானம் நெருங்கியபோது, அப்பகுதியில் எரிமலை வெடித்துச் சிதறியதால், மீண்டும் தில்லிக்கே திரும்பிச் செல்ல விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி தில்லிக்கே திரும்பிவந்ததாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு முழு பணத்தையும் திருப்பி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலி அருகேவுள்ள சுற்றுலா தீவான புளோரஸில் உள்ள 1,584 மீட்டர் உயரமுள்ள எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி செவ்வாயன்று வெடித்தது.

இதன்காரணமாக 10 கி.மீ. உயரத்துக்கு புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஏர் இந்தியா மட்டுமின்றி, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜூன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் பாலி இயக்கப்படும் விமான சேவையை ரத்து செய்துள்ளன.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பிறகு, இதுவரை 83 சேவைகளை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளதாகவும், அதில் 66 போயிங் 787 ரக விமானம் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க : மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்ந... மேலும் பார்க்க

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க