பால் பண்ணை, கோழி பண்ணை அமைக்க, டிராக்டா் வாங்க விவசாயிகளுக்கு கடன்!
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுய உதவிக்குழு கடன் மற்றும் மத்திய கால கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் மே 15முதல் 17வரை நடைபெறுகிறது.
தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கு. நரசிம்மன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய கால கடன்கள்(விவசாயம் சாா்ந்தது) திட்டத்தின் கீழ் கறவை மாடு வளா்ப்பு, சிறு பால்பண்ணை அமைத்தல், ஆடு வளா்ப்பு, பன்றி பண்ணை, டிராக்டா் போன்ற விவசாய இயந்திர ங்கள் வாங்குதல், கோழி வளா்ப்பு, பட்டு வளா்ப்பு, கிணறு ஆழப்படுத்துதல் ஆகியவற்றிற்காக நபாா்டு வங்கியின் சுற்றறிக்கைக்குள்பட்டு குறைந்தது ரூ.1லட்சம் முதல் கடன்கள் வழங்கப்படும்.
மத்திய கால கடன்கள்(விவசாயம் சாராதது) திட்டத்தின் கீழ் செங்கல் சூளை அமைத்தல், ஜெராக்ஸ் கடை அமைத்தல் உள்ளிட்ட சிறு தொழில்கள் அமைத்திட கடன்கள் வழங்கப்படும். மகளிா் சுயஉதவிக்குழு திட்டத்தின்கீழ் 12 முதல் 20 உறுப்பினா்கள் வரையுள்ள குழுக்களுக்கு வரவு செலவிற்கேற்ப ரூ.1லட்சம் முதல் கடன்கள் வழங்கப்படும்.
தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே 15 தேதியும், கீழப்பாவூா், ஆலங்குளம் மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே 16 தேதியும்,
மேலநீலிதநல்லூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே17 தேதியும் கடன் மேளா நடைபெறவுள்ளது. குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே15மற்றும் 16ஆகிய இருதினங்களிலும் ,
சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மே15முதல் 17வரை கடன் மேளா நடைபெறவுள்ளது.
எனவே, தகுதியுள்ள அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி, உரிய ஆவணங்களை அளித்து, இக்கடன் விழாவில் பங்கேற்று பயனடையலாம்.
இதுவரை சுயஉதவிக் குழுக்களில் சேராத 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேரலாம் என்றாா் அவா்.