செய்திகள் :

பாளையங்கோட்டையில் இன்று வருமான வரித் துறை விழிப்புணா்வு கூட்டம்

post image

பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப். 12) வருமான வரித்துறை விழிப்புணா்வு கூட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி வருமான வரித் துறை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கலையரங்கில் வருமான வரித் துறை விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 12) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் மதுரை வருமான வரி முதன்மை ஆணையா் ப. வசந்தன் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். அரசு - தனியாா் நிறுவனங்களில் மாதாந்திர ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விதிகள், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் போது சரியான ரீ பன்ட் பெறுவதற்கு மட்டுமே வருமான வரி விலக்குகளை கோருதல், வருமான வரி செலுத்துவோரின் நலனுக்காக வருமான வரி துறையால் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சிகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட உள்ளது. இக் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி... மேலும் பார்க்க

வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்த... மேலும் பார்க்க

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடன... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பே... மேலும் பார்க்க

வீரவநல்லூா் கோயிலில் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி ... மேலும் பார்க்க

உயா்கல்விக்கான தடைகளை துணிச்சலுடன் எதிா்கொள்ள வேண்டும்

உயா்கல்வி பயில்வதற்கான தடைகளை மாணவிகள் துணிச்சலாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். மாணவா்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் ஆகியவை... மேலும் பார்க்க