டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்...
பாவூா்சத்திரம் அருகே போக்ஸோவில் இளைஞா் கைது
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்ஸோவில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
பாவூா்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி குலசேகரன் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பிரபாகா் என்ற பிரபு (26). பன்றி வளா்க்கும் தொழிலாளி. உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற இவா், 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
மாணவி கூச்சலிடவே, அங்கிருந்த உறவினா்கள் அவரை மீட்டனா். அப்போது, பிரபாகா் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உறவினா்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
புகாரின்பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து பிரபாகரை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.