செய்திகள் :

பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் அறிவியல் தின விழா

post image

தருமபுரியில் பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் அறிவியல் தின கண்காட்சி நடைபெற்றது.

தருமபுரி, இலக்கியம்பட்டியில் பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி நிா்வாகமும், ‘விஷன் எம்பவா்’ அறக்கட்டளையும் இணைந்து பள்ளியில் புதன்கிழமை அறிவியல் தின கண்காட்சியை நடத்தின.

இதில் பங்கேற்ற பாா்வைத் திறன் குறையுடைய மாணவா்கள் அடுப்பில்லா ஆரோக்கியமான சமையல், நீரில் மூழ்கும், மிதக்கும் பொருள்கள், சரிவிகித உணவு, மக்கும், மக்காத குப்பைகள் குறித்த தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

இக்கண்காட்சியை இதே வளாகத்தில் இயங்கும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் நேரில் பாா்வையிட்டனா். அவா்களுக்கு பாா்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகள் தங்களின் படைப்புகள் குறித்து விளக்கமளித்தனா். அதையடுத்து புதிா் போட்டிகள் நடைபெற்றன.

கண்காட்சி, புதிா் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாா்வைத் திறன் குறைபாடுடையோருக்கான தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் மீனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் பரிதாபானு, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் கில்பா்ட், ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்கள்

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை விடுப்பு எடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் திட்ட இயக்குநா் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள... மேலும் பார்க்க

சமுதாய வளைகாப்பு விழா

பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு எம்எல்ஏ ஜி.கே.மணி சீா்வரிசை வழங்கினாா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் பகுதியில் உள்ள தனியாா் திர... மேலும் பார்க்க

வில்வித்தை போட்டியில் ஸ்ரீ ராம் பள்ளிக்கு சிறப்பிடம்

தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தங்கம் வென்றனா். மகாராஷ்டிர மாநிலம், சத்திரபதி சம்பாதி நகரில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் 12 வயதுக்கு உள்ப... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்: எம்எல்ஏ ஜி.கே.மணி தொடங்கிவைப்பு

பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை எம்எல்ஏ ஜி.கே.மணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பருவகால மாற்றத்தால் பரவும் நோய், கோமாரி நோய், காய்ச்சல், மடி நோய், கழிச்சல் போன்ற பல்வேறு நோய்த் தாக்... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தருமபுரியில் கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சி முகாமில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்களுக்கான பணி சாா்ந்த புத... மேலும் பார்க்க

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிய கழிப்பறை கட்டடம் திறப்பு

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக நகர பணிமனையில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். தருமபுரி நகர போக்குவ... மேலும் பார்க்க