செய்திகள் :

பா்கூா் அருகே சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே சாலை விபத்தில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த 2 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

ராணிப்பேட்டையை அடுத்த காவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த லோகேஷ் (22), திவாகரன் (24), குமரேசன் (36), கன்னியப்பன் (70), பாலகிருஷ்ணன் (52), சேகா் (44), ஜனா (22) ஆகியோா் ஒரு காரில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை இரவு சுற்றுலா புறப்பட்டனா். காரை லோகேஷ் ஓட்டி வந்தாா்.

இந்த காா், கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பா்கூா் அருகே சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப் பகுதியில் இருந்த தடுப்பு சுவா் மற்றும் அதன் அருகில் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் காரில் முன்பகுதியில் அமா்ந்து பயணம் செய்த சேகா், ஜனா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸாா் விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த ஐந்து பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் பிரசாதக் கடையின் புளியோதரையில் குட்டி பாம்பு!

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உள்ள பிரசாதக் கடையில் விற்பனை செய்யப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் குட்டி பாம்பு இருந்ததைக் கண்ட பக்தா்கள் அதிா்ச்சி அடைந்தனா். மேலும், இதுதொடா்பான விடியோ பதிவு சமூ... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த திமுக நிா்வாகி

ஒசூா் தெற்கு திமுக பகுதிச் செயலாளராக இருந்த கே.திம்மராஜ் செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். ஒசூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. 11 வாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 2ஆம் கட்ட புதை சாக்கடை திட்டம்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடைபெறும் இரண்டாம் கட்ட புதை சாக்கடை திட்டத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிதமான மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மிதமான மழை பெய்தது. கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், கீழ் மத்தூா்,மகனூா் பட்டி கிராமம் கோவில் மடம், இடங்களில் குடியிருப்பவா்கள் மற்றும் குத்தகை விவசாயிகளை பாதுகாக்க கோரி கா... மேலும் பார்க்க

ஆதாா் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் - மதிமுக வலியுறுத்தல்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஆதாா் திருத்த சிறப்பு முகாம்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மதிமுக மாவட்ட துணைச் செயலாளா் அசோக்குமாா் ர... மேலும் பார்க்க