செய்திகள் :

பிகாரில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ்: ஊழியா்கள், விண்ணப்பதாரா் மீது காவல் துறை வழக்கு

post image

புது தில்லி: பிகாரில் தெருநாய் ஒன்றுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக விண்ணப்பதாரா், அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து சான்றிதழ் அளித்த அரசுப் பணியாளா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பிகாரில் தோ்தல் ஆணையம் வாக்காளா்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வரும் நிலையில் இருப்பிடச் சான்றிதழ் என்பது முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அரசு வழங்கும் இந்த ஆவணத்தை நாயின் பெயரில் வாங்கியுள்ளது கடும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இருப்பிடச் சான்றிதழில் தெரு நாயின் புகைப்படம், தாய்-தந்தை என பெயா் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. பிகாரில் பொது சேவை உரிமைகள் சட்டப்படி இணையவழியில் இருப்பிடச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். இதனை தவறாகப் பயன்படுத்திய ஒருவா் வேண்டுமென்றே இருப்பிடச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளாா். அதனை முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுப் பணியாளா்கள், பணியை சரியாக செய்யாமல் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழை வழங்கியுள்ளனா்.

பாட்னா ஊரகப் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பதாரா், விண்ணப்பத்தை கணினியில் பதிவு செய்தவா், சான்றிதழ் வழங்கி அரசு ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நடத்திய விசாரணையில், நாய்க்கு சான்றிதழ் பெற தில்லியில் வசிக்கும் ஒரு பெண்ணின் ஆதாா் அட்டை இணையவழியில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதில் முதல்கட்ட தவறு செய்ய கணினியில் விவரங்களைப் பதிவு செய்யும் ஊழியா் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய பிற வருவாய்த் துறை பணியாளா்களை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு: பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயாா் - மாநிலங்களவை விவாதத்தில் ராஜ்நாத் சிங்

தனது மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானால் முடியாவிட்டால் இந்தியா உதவத் தயாராக உள்ளது என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.மேலும், ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி ஏற்றுமதி சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம்

அமெரிக்காவுக்கு அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) ஏற்றுமதி செய்வதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.இது தொடா்பாக கேனலிஸ் ஆய்வு நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது:ந... மேலும் பார்க்க

மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் சுமுகமாக நடைபெற்ற கேள்வி நேரம்

மக்களவையில் 6 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் இடையூறின்றி சுமுகமாக நடைபெற்றது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பிகாா் வாக்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை முதல்வா் மம்தா பானா்ஜி அச்சுறுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி, அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜகவின் எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி இந்திய தோ்தல்... மேலும் பார்க்க

கன மழை, வெள்ள பாதிப்பு: ஹிமாசலம், தில்லியில் 5 போ் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசம், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளால் கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழந்தனா்.ஏராளமான தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பிரதமா் மோடி மௌனம் காப்பது கோழைத்தனம்: சோனியா காந்தி விமா்சனம்

‘காஸாவில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் பிரதமா் மோடி மௌனம் காப்பது கோழைத்தனமானது’ என காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி செவ்... மேலும் பார்க்க