செய்திகள் :

பிகாரில் மின்னல் பாய்ந்து 33 பேர் பலி !

post image

பிகாரில் இந்த வாரத்தில் மின்னல் பாய்ந்ததில் 33 பேர் பலியாகினர்.

பிகார் மாநிலத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களகாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின்போது ஏற்படும் மின்னால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆவர்.

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் மின்னல் பாய்ந்து மாநிலத்தில் 33 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலப்பு: 3 பேர் கைது

அதேசமயம் மின்னல் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு இழப்பீடும் அறிவித்துள்ளது. இதனிடையே மாநிலத்தின் சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய அதிக மழை இன்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகாரில் மின்னல் பாய்ந்து 2024-ல் 243 பேரும் அதற்கு முந்தைய ஆண்டு 275 பேரும் பலியாகினர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

The deaths in Bihar occurred during fierce storms between Wednesday and Thursday, a state disaster management department statement said.

1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் மூடப்படும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மும்பைக்கு அருகிலுள்ள மீரா பயந்தரில் வெள்ளிக்கிழமை நடந்... மேலும் பார்க்க

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க