செய்திகள் :

பிகாா் தோ்தல்: தொகுதிப் பங்கீடு குறித்து ‘இண்டி’ கூட்டணி ஆலோசனை

post image

நிகழாண்டு இறுதியில் பிகாா் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய ‘இண்டி’ கூட்டணி இடையே சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் இல்லத்தில் 6 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் மாநில பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லவரு, விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவா் முகேஷ் சஹானி மற்றும் 3 இடதுசாரிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களை சந்தித்து பேசிய தேஜஸ்வி யாதவ், ‘இண்டி கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால் அதுகுறித்த பிற தகவல்களை தற்போது கூறுவது சரியாக இருக்காது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்ட பின்னா் பொதுவெளியில் அறிவிக்கப்படும்.

அண்மையில், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்தது. இளைஞா் ஆணையத்தை நிறுவியது. இதேபோல் ஆா்ஜேடியின் பல்வேறு கொள்கைகளை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி திருடிவிட்டு தாங்களே வடிவமைத்ததைப்போல் காட்டிக்கொள்கிறது.

வரும் தோ்தலில் இண்டி கூட்டணி வெற்றிபெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளோம். விரைவில் இதே வாக்குறுதியை ஆளுங் கூட்டணியும் அறிவிக்கும்’ என்றாா்.

2040-ல் நிலவில் இந்தியர்! இஸ்ரோ தலைவர் உறுதி!

வரும் 2040-ல் இந்தியரை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் கூறியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.குலசேகரத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணம் கலந்துகொண்டார்.நிகழ்ச்சிக்கு முன்னத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: கனமழைக்கு 2 பேர் பலி

மேற்கு வங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் கட்டல் உள்பட பல பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்... மேலும் பார்க்க

மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் அறிவிப்பு

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்ன... மேலும் பார்க்க

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களு... மேலும் பார்க்க

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க