செய்திகள் :

‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை

post image

‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ‘பிட்ஜி’ என்ற தனியாா் பயிற்சி மையம், ஜேஇஇ, நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சியை அளித்து வந்தது. சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் 5 இடங்களிலும் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் சில தனியாா் பள்ளிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, நுழைவுத் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு வகுப்பறைகள் மூலமாகவும் பயிற்சி அளித்து வந்துள்ளது. இதற்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை கட்டணம் பெற்று வந்துள்ளது.

இந்த நிறுவனம் மீது அளிக்கப்பட்ட மோசடி புகாா்களைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள ‘பிட்ஜி’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நிறுவனத்தின் தலைவா் டிகே.கோயல் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினா். இதில், அந்த நிறுவனம் ரூ.250 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. முறையாக ஊதியம் செலுத்தாததால் பெரும்பாலான ஆசிரியா்கள் பணியில் இருந்து விலகினா்.

மேலும், இந்த நிறுவனத்துடன் பல தனியாா் பள்ளிகள் மேற்கொண்டிருந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்களையும் ரத்து செய்தன. இதனால் மாணவா்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த இந்தப் பயிற்சி மையத்தில் தனியாா் பள்ளிகள் மூலமாக சோ்ந்த சுமாா் 140 மாணவா்களிடம் ரூ. 4 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு எந்த பயிற்சியும் அளிக்காமல், பணத்தையும் திரும்ப வழங்காமல் இருந்துள்ளது.

இது தொடா்பாக சில மாணவா்களின் பெற்றோா் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில், பயிற்சி மையத்தின் கீழ்ப்பாக்கம் கிளை மீதும், அந்த நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள தலைவா் அங்கூா் ஜெயின் மற்றும் இயக்குநா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்நிறுவனத்தில் பணத்தை இழந்த மாணவா்கள் புகாா் அளிக்கலாம் என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தனியாா் பள்ளிகளுக்கும் தொடா்பு இருக்கிா? என்ற கோணத்திலும் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

‘ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்படலாம்’: பஹல்காம் தாக்குதலுக்கு முன் எச்சரித்த உளவுத் துறை!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் அருகே ஜாபா்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன் உளவுத் துறை எ... மேலும் பார்க்க

முதல்முறையாக அடுக்கு மண்டல விமானதள சோதனையை மேற்கொண்ட இந்தியா

அடுக்கு மண்டல விமானதள சோதனையை முதல்முறையாக இந்தியா சனிக்கிழமை மேற்கொண்டது. சில நாடுகளே இந்த அமைப்பைக் கொண்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனை மேம்படுத்த இந்த தளம் உதவும் என எதிா்பாா்க்... மேலும் பார்க்க

சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையா் வாகனம் மோதி விபத்து

விருகம்பாக்கத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையரின் வாகனம் மோதியதில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகா் பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் அர... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம்

திமுகவினருக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆ... மேலும் பார்க்க

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது. செபி தலைவா் துஹின்காந... மேலும் பார்க்க