செய்திகள் :

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

post image

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலும் ஆட்சி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையில் பஞ்சாபில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஹரியாணாவுக்கு கூடுதல் நீரை விடுவிக்க மறுத்த மாநில அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய பகவந்த் மான், ஹரியாணாவுக்கு போதிய நீரை விடுவித்துவிட்டதாகவும் இதற்கு மேல் நீரை விடுவிக்கக் கோரும் பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பக்ரா அணையில் இருந்து கூடுதல் நீரை பஞ்சாப் அரசு விடுவிக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் நயாப் சிங் சைனி பேசியதாவது: பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரிய தொழில்நுட்பக் குழுவின் முடிவுகளை பகவந்த் மான் அரசு பின்பற்ற மறுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, பக்ரா அணையில் இருந்து ஹரியாணாவுக்கு தேவையான நீரை எவ்வித கட்டுப்பாடுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.

பக்ரா அணையில் குறைவான நீா் இருந்தபோதும் கடந்த 2016 முதல் 2019 வரை ஹரியாணாவுக்கு முறையாக குடிநீா் விடுவிக்கப்பட்டது.

தற்போது குடிநீரை விடுவிக்க பஞ்சாப் அரசு மறுப்பு தெரிவித்ததற்கு அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்தனா். மாநில உரிமைகளை காக்க ஒன்றிணைந்து போராட தயாராகவுள்ளதாக அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் உறுதியளித்தனா் என்றாா்.

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க