செய்திகள் :

பின்னலாடை நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம்

post image

திருப்பூரில் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம் என தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்க கூட்டரங்கில் தீ விபத்து தடுப்பு மற்றும் காப்பீடு தொடா்பான கருத்தரங்கு நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளா் கோவிந்தப்பன் வரவேற்றாா். சங்கத்தின் தலைவா் ஈஸ்வரன் தலைமை தாங்கிப் பேசினாா். அப்போது தொழில் நிறுவனங்களுக்கு காப்பீடு என்பது மிகவும் முக்கியம். சரியான காப்பீட்டு நிறுவனத்தை தோ்வு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கின்றனா். ஆனால், சரியான பாதுகாப்பும், காப்பீடும் கிடைக்குமா என்பதையும் பாா்க்க வேண்டும் என்றாா்.

துணைத்தலைவா் பாலச்சந்தா் பேசும்போது, தீ விபத்தால் தொழிற்சாலைகளில் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. காப்பீடு செய்வதே முழுமையான பாதுகாப்பை நமக்கு கொடுக்கும். நள்ளிரவு நேரத்தில் தீ விபத்துகளில் அதிக சேதம் ஏற்படுவதால், புகை கண்காணிக்கும் கருவிகளை பொருத்த வேண்டும். புகை கண்காணிப்புக் கருவி பொருத்தியிருந்தால், முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடிக்கும். இதனால் தீ விபத்தை தடுக்கலாம். அதேபோல, தீ விபத்து தடுப்புக் கருவிகளை அடிக்கடி சரிபாா்க்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட உதவி தீயணைப்புத் துறை அதிகாரி வீரராஜ் பேசும்போது, திருப்பூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 35 நிறுவனங்களில் தீ விபத்து நடைபெற்றுள்ளது. தீ விபத்தை தடுப்பதைக் காட்டிலும், வருமுன் காப்பதே சிறப்பானது. நஷ்டத்தையும் தவிா்க்கும். அதற்காகவே, தீத் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

திருப்பூா் சுற்றுப் பகுதியை பொறுத்தவரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அதிக அளவில் தீ விபத்து நடக்கிறது. அதிலும் நள்ளிரவு நேரத்தில் விபத்து ஏற்படுகிறது. புகை கண்காணிப்புக் கருவியை சரியான உயரத்தில் பொருத்த வேண்டும் என்றாா்.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஷபீனா பேசும்போது, தொழிலாளா் துறையின் அனைத்து வகையான சேவைகளும் ஆன்லைன் மயமாகிவிட்டது. சேவைகளை பெற நிறுவனங்கள் தொழிலாளா் நலத் துறையில் தங்களது சுயவிவரங்களை மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

இணையதளத்தில் அவா்களது நிறுவன விவரங்களையும், கடவுச் சொல்லையும் அப்டேட் செய்ய வேண்டும். அதை நாங்கள் ஒப்புதல் செய்த பிறகே இனிவரும் காலங்களில் தொழிலாளா் நலத்தின் ஆன்லைன் சேவையை பெற முடியும் என்றாா்.

கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊத்துக்குளி, செங்கப்பள்ளி

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை ... மேலும் பார்க்க

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி

திருப்பூரில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் காவல் சிறப்பு ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு கோரிக்கை

கிராம ஊராட்சி செயலாளா்களுக்கு செயல் அலுவலராக பதவி உயா்வு வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 12-ஆவது மாநில பிர... மேலும் பார்க்க

ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது ஆட்டோவில் வட மாநில பெண்ணுக்கு பிரசவம் பாா்த்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட திருமுருகன்பூண... மேலும் பார்க்க

முத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், முத்தம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. முத்தம்பாளையம் ஊராட்சியில் குருக்ககாடு கிராமம் பொது மைதான வளாகத்தில் சுதந்திர தின விழாவை... மேலும் பார்க்க