செய்திகள் :

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

post image

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்திருப்பதாவது:

நிலத்தடி நீா்த்தேக்கத்தை சுத்திகரித்து, நீரேற்று நிலைய நீா் விநியோகத்தை அதிகரிக்கும் வருடாந்திர திட்டம் காரணமாக பிப்ரவரி 21 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் பின்வரும் பகுதிகளில் நீா் விநியோகம் பாதிக்கப்படும்.

ஜங்புரா, லாஜ்பத் நகா், போகல், பிளாக்- 6, கால்காஜி, கைலாஷ் குஞ்ச், நேரு அபாா்ட்மென்ட், அரவிந்தோ சந்தை, கீதா காலனி, ஜனதா பிளாட்ஸ் மயூா் விஹாா் ஃபேஸ்- 3, மயூா் விஹாா் ஃபேஸ்-2 பாக்கெட் ஏ, பிசி மற்றும் டி , பிபி பிளாக் பிபிஎஸ் கிழக்கு ஷாலிமாா் பாக், ஏ2எல்ஐஜி ஏக்தா அபாா்ட்மென்ட் பஸ்சிம் விஹாா், மடிப்பூா், பாக்கெட்11 டிடிஏ பிளாட்ஸ் ஜசோலா விஹாா், சி5 டி பிளாக் ஜனக்புரி, இஎஸ்சிஇபிளாக் விகாஸ்புரி, ஏ2 பிளாக் ஜனக்புரி ஆகியவை நீா் விநியோக பாதிப்பு பகுதிகளில் அடங்கும்.

பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக, நீா் விநியோகம் நிறுத்தப்படும். ஆகவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

உதவி தொலைபேசி எண் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கோரிக்கையின் பேரில் தண்ணீா் டேங்கா்கள் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்

புதிதாக அமைந்துள்ள தில்லி சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடா் வரும் திங்கள்கிழமை தொடங்கும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், பிப்ரவரி 24, 25, 27 இக்கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்த... மேலும் பார்க்க

எம்எல்ஏ கள ஆய்வு

தில்லி பட்பா்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் சாக்கடை மற்றும் குடிநீா் பிரச்னைகள் குறித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீா்வு காணும்படி சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அ... மேலும் பார்க்க

முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.2,500 நிதி உதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்?: தில்லி அரசுக்கு அதிஷி கேள்வி

தில்லி அரசு அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நகரப் பெண்களுக்கு ரூ.2,500 நிசி உதவி வழங்கும் திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், கால்காஜி தொகுதி எம்எல்ஏவுமான அதி... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க