செய்திகள் :

பிப். 17-ல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை!

post image

வருகிற பிப். 17 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப். 12) உத்தரவிட்டுள்ளது.

அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஓ.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அதிமுக உள்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம், புதிய தலைமை ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்தவித நிபந்தனையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தீர்ப்பினை வரவேற்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார்.

தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பிப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

"அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன் சாலை, அசோகா ஹோட்டலில் உள்ள டாக்டர் கேபிஎம் ஹாலில் 17-02-2025 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை மீது மகள் புகார்! தாயின் உடல் தோண்டியெடுப்பு!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மகளின் புகாரின் அடிப்படையில் தாயின் உடலை காவல் துறையினர் தோண்டியெடுத்துள்ளனர்.அலப்புழாவைச் சேர்ந்த வி.சி.சாஜி (வயது 48) என்ற பெண், கடந்த பிப்.8 அன்று வீட்டின் படிகளி... மேலும் பார்க்க

அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து! 3 மாணவர்கள் காயம்!

புதுச்சேரியில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.... மேலும் பார்க்க

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 1... மேலும் பார்க்க

புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 நோட்டுக்கள்! ஆர்பிஐ தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி இன்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநராக பதவியேற... மேலும் பார்க்க

மீண்டும் சின்ன திரையில் நதியா!

நடிகை நதியா சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இந்நிகழ்ச்சியின் 10-வது சீசன... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் 1.1 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் 1.1 கிலோ அளவிலான போதைப் பொருள் கடத்த முயன்ற 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடி... மேலும் பார்க்க