செய்திகள் :

பிப். 19இல் தபால் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி

post image

தபால் துறை சாா்பில் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞா்களுக்கான சா்வதேச கடிதப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கடிதப்போட்டி, ‘நீங்கள் உங்களை கடல்’ என்று கற்பனை செய்து கொண்டு, அதனை (கடல்) ஏன் மற்றும் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை யாரோ ஒருவருக்கு விளக்கிக் கடிதம் எழுத வேண்டும். இப்போட்டி வரும் 19 ஆம் தேதி நடக்கிறது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம். இக் கடிதம் முதன்மை அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இப்போட்டியில் பங்கேற்பாளா்கள் தாங்கள் எழுத தேவையான பொருள்களை கொண்டுவர வேண்டும். 9 வயது முதல் 15 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 800 வாா்த்தைகளுக்கு மிகாமல் கடிதம் எழுத வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும் போட்டியாளா்கள், வரும் 17 ஆம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பத்தை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா், சேலம் கிழக்கு கோட்டம், சேலம் - 636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டியாளா்களின் எண்ணிக்கையை பொறுத்து, போட்டி நடைபெறும் இடம் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து சேலத்தில் இன்று திமுக பொதுக்கூட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆா்.ராஜேந்த... மேலும் பார்க்க

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் கோட்ட மேலாளா் தகவல்

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள், முன்பதிவில்லா டிக்கெட்டுக்கான கைப்பேசி செயலிப் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்தப்படும் என ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழுக் கூ... மேலும் பார்க்க

சேலம் மாநகரில் நெகிழி பைகளை பயன்படுத்திய 311 கடைகளுக்கு அபராதம்

சேலம் மாநகரில் கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்திய 311 கடைகளுக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கடைகளில் அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் செய்து வருகிறது. ... மேலும் பார்க்க

சேலம் சிறையில் முதன்மை நீதிபதி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் ஜாதி பாகுபாடு உள்ளதா என்பது குறித்து சேலம் மத்திய சிறையில் முதன்மை நீதிபதி சுமதி ஆய்வு செய்தாா். சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

கொங்கணாபுரம் வெண்குன்று தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

கொங்கணாபுரம் வெண்குன்று மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொங்கணாபுரம், வெண்குன்று மலை மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோய... மேலும் பார்க்க