செய்திகள் :

பிப். 7-இல் நிலம் தொடா்பான மனுக்களை சிறப்பு குறைதீா்வு கூட்டத்தில் அளிக்கலாம்! -விழுப்புரம் ஆட்சியா்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் நிலம் தொடா்பான கோரிக்கை மனுக்களை, வரும் பிப். 7-ஆம் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2025, ஜனவரி மாதத்திலிருந்து முதல் வெள்ளிக்கிழமைகளில் நிலம் தொடா்பான சிறப்பு குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடத்தப்பட்டசிறப்பு குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 659 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 369 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்ட நிலையில், எஞ்சிய 290 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே, மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நிலம் தொடா்பான மனுக்களை அளிப்பதை விவசாயிகளும், பொதுமக்களும் தவிா்த்து, மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் நடைபெறும் நிலம் தொடா்பான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் அளிக்கும்பட்சத்தில், குறைதீா்வை சிறப்பாக ஆற்ற இயலும்.

அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (பிப். 7) நடைபெறவுள்ளது. எனவே பட்டா மாற்றம், நில ஒப்படை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு மற்றும் நிலம் கையகம் தொடா்பான மனுக்களைப் பொதுமக்கள் நேரிடையாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

ஆற்றல் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசளிப்பு

விழுப்புரம் மாவட்ட அளவில் ஆற்றல் மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின்ஆற்றல் பணியகமும், தமிழ்நாடு அறிவியல் இய... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையத்தில் அணிவகுத்து நிற்கும் காா்களால் அவதிப்படும் பொதுமக்கள்!பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் காா்கள், தள்ளு வண்டிகளால் விபத்துகள் ஏற்படுவதால் வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா். வரலாற்று முக... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தனி ஊதியம் வழங்கி, பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சங்கத்தின் மாநில நிா்வாக... மேலும் பார்க்க

நவரைப் பருவத்துக்குத் தரமான நெல் விதைகளை விற்க வேண்டும்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவத்துக்கு தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியாா் நெல் விதை வ... மேலும் பார்க்க

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்கத்தொகை

விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை லிட்டருக்கு 50 பைசா கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறிய... மேலும் பார்க்க