செய்திகள் :

பிப்.8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்

post image

பிப்.8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை ஞாயிற்றுக்கிழமை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

03-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

04-02-2025 முதல் 08-02-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (02-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 -23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (03-02-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: வடகடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. இதர மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.8.57 கோடி பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது!: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்துமுறையை புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அறிஞருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 8.57 கோடி) பரிசை வழங்கிடத் தமிழ்நாடு காத்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: 2026 ஜனவரிக்குள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமையும்- உதயநிதி ஸ்டாலின்

ராமநாதபுரம்: 2026 ஜனவரிக்குள் பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைய இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ரூ.42.90... மேலும் பார்க்க

மக்களுக்கான மகத்தான ஆட்சி: ஆதவ் அர்ஜுனா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவையடுத்து, அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செ... மேலும் பார்க்க

அண்ணா நினைவு நாள்: சென்னையில் நாளை (பிப்.03) போக்குவரத்து மாற்றம்

அண்ணா நினைவு நாளில் அமைதிப் பேரணி நடைபெறவிருப்பதையொட்டி சென்னையில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரு... மேலும் பார்க்க

3 முக்கிய சுகாதாரத் திட்டம்: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியில் தொடக்கம்

சமூக மேம்பாட்டிற்காக மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமி (MAHER) 3 சுகாதாரத் திட்டங்களை தொடங்கியுள்ளது.உயர்கல்வியில் முன்னோடியாக இருக்கும் பல்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகமான மீனாட்சி உயர் கல... மேலும் பார்க்க

தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தவெக மாறும்: விஜய்

தமிழக அரசியலின் கிழக்கு திசையாக தமிழக வெற்றிக் கழகம் மாறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இரண்டாம் ஆண்டு தொடக்கத... மேலும் பார்க்க