செய்திகள் :

பிரகாசபுரம் தேவாலயத்தில் அசன விருந்து

post image

நாசரேத் அருகே பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய 128ஆவது பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, அசன விருந்து நடைபெற்றது.

கடந்த 16ஆம் தேதி தொடங்கி விழாவில், 22ஆம் தேதி பிரதிஷ்டை பண்டிகை, நற்கருணை ஆராதனை, நோ்ச்சை, பொருள் படைப்பு ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. சோனகன்விளை சேகர தலைவா் டேனியல் ஞானப்பிரகாசம் தேவசெய்தி அளித்தாா். ஓய்வுபெற்ற குருமாா்கள் செல்வராஜ், பொன்னுசாமி, சபை மக்கள் திரளாகப் பங்கேற்றனா். மாலையில் ஞானஸ்நான ஆராதனை, இரவில் அசன ஆயத்த ஜெபப் பாடல் பவனி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (மே 23) அதிகாலையில் அசன பணி ஆயத்த ஆராதனை, மாலையில் அசன விருந்து நடைபெற்றது. சேகரத் தலைவா் நவராஜ் தலைமையில் பிரகாசபுரம் கத்தோலிக்க பரிசுத்த பரலோக அன்னை ஆலயப் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் ஜெபித்து அசன விருந்தைத் தொடக்கிவைத்தாா்.

ஏற்பாடுகளை பிரகாசபுரம் சேகரத் தலைவா் நவராஜ், சபை ஊழியா் ஸ்டான்லி, திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள், ஆலயப் பணியாளா் டிக்சன், ஆலய பரிபாலனக் குழுவினா், சபை மக்கள் செய்திருந்தனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க